அம்பாறை மாவட்ட இளைஞர் இணைப்பாளர்களுக்கான ஒன்றுகூடல்



எம்.என்.எம்.அப்ராஸ்-
மாதானமும் சமூக பணி (PCA) நிறுவனத்தின் அனுசரணையில் அம்பாறை மாவட்டத்தின் 20 பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள நல்லிணக்க இளைஞர் பிரதேச இணைப்பாளர்களுக்கான ஒன்றுகூடல் அம்பாரையில் நேற்று (17)இடம்பெற்றது.
இதன் போது பிரதேச ரீதியில் நல்லிணக்க வேலைத் திட்டங்கள் மற்றும் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நல்லிணக்க செயற்திட்டங்கள், நல்லிணக்கத்துக்கு சவாலான விடயங்கள்,எதிர்கால செயற்திட்டங்களை முன் கொண்டு எதிர்வரும் வருடங்களுக்கு நல்லிணக்க செயற்பாடுகளை எவ்வாறு கொண்டு செல்லலாம் என்பது பற்றி கலந்துரையாடல் இடம்பெற்றது.

மேலும் இதன் போது நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர்களான கே.டி.ரோகிணி,
எச்.டப்ளியு.எம்.சுரேகா,எஸ்.எல்.எம்.இஸ்ரத் அலி, எம்.தர்சன் மற்றும் அம்பாரை மாவட்ட இளைஞர் நல்லிணக்க மன்றத்தின் இணைப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :