அரசாங்க அதிபரின் பங்கேற்புடன் மண்முனை தென்மேற்கு பிரதேச சபை ஆலோசனைக் குழுக் கூட்டம்




அஸ்லம் எஸ்.மௌலானா-
ண்முனை தென்மேற்கு பிரதேச சபை ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை பிரதேச சபை கேட்போர் கூடத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் அவர்களின் பங்கேற்புடன் பிரதேச சபையின் தவிசாளர் சி.புஸ்பலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
ஆளுகை புத்தாக்க நிறுவகத்தின் அனுசரணையுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் அதன் ஆலோசகர் எம்.ஐ.எம்.வலீத் கலந்து கொண்டு, பிரதேச சபையின் செயற்பாடுகளில் ஆலோசனைக் குழுவின் வகிபாகம் தொடர்பில் விளக்கவுரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் தட்சணகௌரி தினேஸ், மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் உப தவிசாளர் போ.கோபாலபிள்ளை, சபையின் செயலாளர் கே.ஜோன் பிள்ளை உட்பட மற்றும் பல உத்தியோகத்தர்களும் பிரமுகர்களும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது ஆலோசனைக் குழு உறுப்பினர்களினால் சுட்டிக்காட்டப்பட்ட பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்க அதிபர் விரிவாக ஆராய்ந்ததுடன் அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் கூடிய கவனம் செலுத்தினார்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -