பட்டதாரி ஆசிரியர் போட்டிப்பரீட்சையில் சித்தி அடைந்தவர் அனைவரும் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்படுவர்-ஆளுநர்



பாட்டதாரிகள் ஆசிரிய நியமனம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா மேற்கொண்ட முயற்சிக்கு ஆளுனர் ரோஹித போகல்லாகம சாதகமான பதில்.

கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர் போட்டிப்பரீட்சையில் சித்தி அடைந்தவர்களில் 1400 பேருக்கு மாத்திரம் நேர்முகப்பரீட்சைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலமை தொடர்பில் நேற்றைய தினம் கிழக்கு மாகாண பட்டதாரிகள் சங்க பிரதிநிதிகள் பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்களை சந்தித்து கலந்துயாடியதற்கமைவாக இன்றைய தினம் ஆளுனர் அலுவலகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் பட்டதாரி சங்க பிரதிநிதி அவர்களையும் இணைத்துக்கொண்டு கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகல்லாகம அவர்களுடன் நடாத்திய பேச்சுவார்த்தையை அடுத்து பரீட்சையில் சித்தி அடைந்த அணைத்து பரீட்சத்திகளையும் நேர்முகப்பரீட்சைக்கு அழைப்பது என்று தீர்மாணிக்கப்பட்டதை தொடர்ந்து கிழக்குமாகாணத்தில் உள்ள 4000த்திற்கும் மேற்பட்ட ஆசிரிய வெற்றிடங்களுக்கும் திறைசேரி அனுமதியை பெறுவது தொடர்பில் நாளை ஆளுனர் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -