சாய்ந்தமருதில் போராட்டம் உக்கிரம்- வீதி மறியலில் 4000 மேற்பட்ட மக்கள் செய்வதறியாது திகைக்கும்...!

சாய்ந்தம்ருதில் தனியான உள்ளூராட்சி மன்றக் கோரிக்கைப் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது.

ஊரில் சகல வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு மக்கள் நோன்பு நோற்று தங்களது போராட்டத்தை செய்து கொண்டிருக்கின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் சற்று முன்னர் வீதிக்கு வந்து அமர்ந்துள்ளதால் வீதிப்போக்குவரத்துக்கள் முற்றாகத் தடைப்பட்டுள்ளதுடன் மாற்று வழிகளை பயன்படுத்தி வாகனங்கள் செல்லும் நிலை உருவாகியுள்ளது.

சுமார் 4000 க்கு மேற்பட்ட மக்கள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமையைக் காணக்கூடியதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -