ஏ.எம்.கீத் திருகோணமலை-
திருகோணமலை மெக்கெய்சர் மைதானத்தில் நேற்று மாலை எதிர்கட்சி தலைவர் இரா.சம்மந்தன் தலைமையில் யுவன்புர நிகழ்வின் ஆரம்ப நிகழ்வானது ஆரம்பமானது. இந்நிகழ்வில் உள்நாட்டைச்சேர்ந்த 6000 இளைஞர் யுவதிகளும் வெளிநாட்டைச்சேர்ந்த 100 இளைஞர் யுவதிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இலங்கையின் கௌரவ பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவின் ஆலேசனைகளுடன் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சின் செயற்படுத்தல் ஆலோசனைகளுடனும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நடைமுறைபடுத்தலின் கீழ் இன்நிகழ்வானது 29-03-2017 அன்று ஆரம்பித்து 01-04-2017 முடிவடையுமென்பது குறிப்பிடத்தக்கது.