பொலிஸ் நிலையத்திலிருந்து காணாமல் போன துப்பாக்கிகள் விஹாரையிலிருந்து மீட்பு..!

மாத்தளை, லக்கல பொலிஸ் நிலையத்திலிருந்து கடந்த 13ஆம் திகதி காணாமல் போன துப்பாக்கிகள் வெல்லவெல சந்தஹல விஹாரையிலிருந்து இன்று 16ஆம் திகதி மீட்கப்பட்டுள்ளது.

குறித்த விஹாரையின் பிக்குமார் குளிப்பதற்காக ஒத்துக்கப்பட்டுள்ள குளியலறையிலிருந்து அந்த துப்பாக்கிகள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

லக்கல பொலிஸ் நிலையத்திலிருந்து 5 கிலோமீட்டர் தூரத்தில் குறித்த விஹாரை அமைந்துள்ளது.

திருடப்பட்ட ரி_56 ரக துப்பாக்கி மற்றும் 5 ரிவோல்வர்கள் அந்த இடத்திலிருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -