பாலியல் கல்வி பாடத்திட்டத்தை எதிர்த்து பேராயரின் நிலைப்பாட்டை வரவேற்ற இலங்கை உலமா கட்சி



பாலியல் கல்வியை பாடத்திட்டத்தில் உள்ளடக்குவது சிறுவர்களைத் தவறான வழியில் திசைதிருப்பும் முயற்சியாகும் எனக் கண்டித்த பேராயர் மல்கம் ரஞ்சித் அவர்களின் கருத்தை இலங்கை உலமா கட்சி வரவேற்றுள்ளது.

6ஆம் தரம் முதல் பாலியல் கல்வி கற்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதோடு, தன்பால் உறவு மற்றும் பிறப்புக்கட்டுப்பாடு போன்ற விஷயங்களும் சேர்க்கப்படவுள்ளதான தகவல் கவலை அளிப்பதாக கட்சி தெரிவித்துள்ளது.

இத்தகைய நாகரிகமற்ற விஷயங்களை குழந்தைகளுக்குக் கற்பிப்பது கல்வி அல்ல, திசைதிருப்பும் செயல் எனவும், இத்தகைய விடயங்களை எடுத்துரைக்கும் பொறுப்பு பெற்றோர்களுக்கே உரியது எனவும் கட்சி வலியுறுத்தியுள்ளது.

ஏற்கனவே பாடசாலைகளில் மாணவர்-ஆசிரியர் துஷ்பிரயோகங்கள் நடைபெறும் சூழலில், பாலியல் கல்வி அறிமுகம் புதிய பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்றும் கட்சி எச்சரித்துள்ளது.

“நம் நாட்டின் கலாசாரம், நாகரிகம், மதம் ஆகியவற்றை பாதுகாக்க தலைவர்கள் முன்வர வேண்டும். அமைச்சு அல்லது பிற அமைப்புகளின் விருப்பப்படி நாட்டின் மதிப்புகளை திசைதிருப்ப அனுமதிக்கக்கூடாது” என கட்சி தலைவர் முபாரக் அப்துல் மஜீத் முப்தி ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :