சவூதியில் கடும் மழை­ - வெள்ளத்தில் சிக்கி 18 பேர் உயி­ரி­ழப்பு

பொது­வாக வறட்­சி­யான பாலை­வன நாடு­க­ளாக விளங்கும் சவூதி அரே­பியா, யேமன், ஈரான் மற்றும் கட்டார் ஆகிய நாடு­களில் வழ­மைக்கு மாறாக இடம்­பெற்ற கடும் மழை­வீழ்ச்­சியால் பெரும் வெள்ள அனர்த்தம் ஏற்­பட்­டுள்­ளது.

சவூதி அரே­பி­யாவில் மட்டும் இந்த வெள்ள அனர்த்­தத்தில் சிக்கி குறைந்­தது 18 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர்.

தலை­நகர் றியாத் மற்றும் மக்கா ஆகிய பிராந்­தி­யங்­க­ளி­லுள்ள பல வீதிகள் வெள்­ளத்தில் மூழ்­கி­யுள்­ள­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன.

அந்தப் பிராந்­தி­யங்­களில் வெள்­ளத்தில் சிக்­கி­யி­ருந்த வாக­னங்­க­ளி­லி­ருந்து பலரை மீட்புப் பணி­யா­ளர்கள் வியா­ழக்­கி­ழமை மீட்­டுள்­ளனர். அதே­ச­மயம் தென்­மேற்கு நக­ரான அபாவும் பகு­தி­யும் வெள்­ளத்தில் மூழ்­கி­யது.

இந்த வெள்ள அனர்த்தத்தால் சவூதி அரே­பிய தலை­ந­க­ரிலும் ஏனைய பிராந்­தி­யங்­க­ளி­லு­முள்ள பாட­சா­லை­களை பல நாட்­க­ளுக்கு மூடும் நிர்ப்­பந்தம் ஏற்­பட்­டுள்­ள­தாக அந்­நாட்டு கல்வி அமைச்சு தெரி­விக்­கி­றது.

அந்­நாட்டின் அயல்­நா­டான யேமனில் கடும் மழை­வீழ்ச்சி கார­ண­மாக தலை­நகர் சனா­வுக்கு வடக்­கே­யுள்ள ஹஜ்ஜா மற்றும் ஒம்ரான் மாகாணங்­க­ளி­லுள்ள இரு அணைகள் உட்­பட பல சிறிய அணைகள் சேத­ம­டைந்ததால் ஏற்­பட்ட வெள்ள அனர்த்­தத்தில் சிக்கி குறைந்­தது 16 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன.

அதே­ச­மயம் ஈரானின் மேற்கு மற்றும் தென்­மேற்கு மாகா­ணங்கள் இந்த வெள்ள அனர்த்தத்தால் பெரிதும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அங்கு குறைந்­தது இருவர் உயி­ரி­ழந்­துள்­ள­தா­கவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் கட்டாரிலும் இடி மின்னலுடன் கடும் மழை பெய்து வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -