நவீன கற்றல் கற்பித்தல் முறையியல்கள் நூலின் நூலறிமுகம்

நூல் : நவீன கற்றல் கற்பித்தல் முறையியல்கள்
ஆசிரியர் : பாலசுப்பிரமணியம் தனபாலன்
வெளியீடு : குமரன் புத்தக இல்லம்.
விலை : 300.00
நூலறிமுகக் குறிப்பு : அட்டாளைச்சேனை எஸ்.எல். மன்சூர்


நவீன கற்றல் கற்பித்தல் முறையியல்கள் எனும் கல்வியில் புத்தகத்தின் இரண்டாவது பதிப்பாக வெளிவந்துள்ளது. நல்ல கல்விச் சிந்தனையாளரும், விவேகமிக்க பேச்சாளருமான இந்நூலுக்குரிய விரிவுரையாளர் பா.தனபாலன் அவர்களது கல்விசார்பான ஏழு கட்டுரைகளும் பாடசாலை மட்ட பண்புசார் கல்வி முகாமைத்துவம் சம்பந்தமான பின்ணிபை;புடன் வெளிவந்துள்ள தொகுப்பு இதுவாகும்.

ஆசிரியத்தில் கற்றலும் கற்பித்தலும் எனும் தலைப்பில் தன்னுடைய முதலாவது கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது. ஆசிரியர்களின் கற்றல் கற்பித்தல் தொடர்பான பல்வேறு உளவியல் கருத்துக்களுடன் ஆசிரியர்களது செயற்பங்கு சம்பந்தமாகவும் அதனைத் தொடர்ந்து உளவியல் சார்ந்த விடய ஆய்வு – நிகழ்வுக் கற்கை என்னும் வினாவிடைகளும் ஆசிரியரால் தரப்பட்டுள்ளது. மேலும் இதிலுள்ள பிரச்சினைகளை மையப்படுத்தி பிரச்சினைகளும் தீர்வுகளும் அறிகைசார் அணுகுமுறைகள் சம்பந்தமாகவும் தெளிவாகக் குறிப்பிட்டப்பட்டுள்ளது. இக்கட்டுரையில்


'எம்மைச்சுற்றிய சமூகத்தில் அன்றாடம் நடக்கும் மிருகத்தனமான நடவடிக்கைகள் பாடசாலைகளும், கற்றல் - கற்பித்தலில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களும், கல்வித் துறையினரும் தமது நோக்கத்தை சரியாக நிறைவேற்றவில்லை என்பதையும் சரியான கற்றல் - கற்பித்தல் விழுமியங்கள் பேணப்படவில்லை என்பதையுமே காட்டுகின்றன' என்று கூறி, காலத்திற்கேற்றவாறு நவீன கற்பித்தல் முறைகளை ஆசிரியர்கள் கைக்கொள்வதன் முக்கியத்துவம் பற்றியும் விரிவாகக் கூறுகின்றார். நூலாசிரியரான கல்விக் கல்லூரி விரிவுரையாளர் திரு. பா. தனபாலன் ஆவார்.

நூலின் இரண்டாவது அத்தியாமாக கற்றல் பரிமாணங்களும் முறையியல்களும் எனும் தலைப்பில் ஆய்வு செய்து வடித்துள்ளார். இதில் கற்றல் பரிமாணங்கள் தொடர்பான உளவியல் அறிஞர்களது பல்வேறு கூற்றுக்களை ஒப்புவித்து இணைந்துவாழ்வதற்காக் கற்றல் பண்மைச்சமூக உணர்வோடு முரண்பாடுகளை முகாமைசெய்தல், பரஸ்பர நல்லுறவு, சமாதானம், கூட்டுமுயற்சியில் ஈடுபடல் போன்றவற்றை உணர்த்தும் இந்த நான்கு நோக்கங்களுடாக இன்றைய கற்றலின் பரிமாணங்கள் உயர்வடைகின்றன என்றும் கூறுகின்றார் நூலாசிரியர் பி. தனபாலன்.

கற்பித்தல் செயலொழுங்கு எனும் தலைப்பில் மூன்றாவது அத்தியாயம் எடுத்தாள்கின்றது. நிலையான மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு செயலொழுங்கை கற்றல் என்கிறோம். இந்த மாற்றத்தை ஏற்படுத்த முனையும் இன்றைய கல்;விக்கான ஆசிரியர்களின் தனியுரிமை சிதைந்துள்ளது. பல ஆசிரியர்கள் கற்பித்தில்; ஆர்வமோ, ஆயத்தமோ அற்றவர்களாகவுள்ளனர் என்கிற விமர்சனமும் உள்ளது. என்று கூறி அதற்கான பல்வேறு ஆலோசனைகளும், கற்றல் செயலொழுங்கு முறைகளும் இந்;நூலின் ஊடாக கற்றல் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு சிறந்த விளக்கங்களை தந்துள்ளார்.


தனது நான்காவது அத்தியாயத்தில் கற்பவர் மைய அணுகுறைகளும் கற்பித்தல் முறையியல்கள் சம்பந்தமான பல்வேறு செயலொழுங்குடன் இவ்வத்தியாயம் எழுதப்பட்டுள்ளது. அத்துடன் இவ்வத்தியாயத்தில் கற்பித்தல் முறைகள் பலவற்றையும் உள்டக்கியதாகவும் இக்கட்டுரை விளக்குகின்றது. ஐந்தாவது அத்தியாயமான செயற்பாட்டு ஆய்வு முறை எனும் தலைப்பிலும் சில ஆய்வுகளைத் தந்து ஆசிரியர்கள் தங்களிடம் வழங்கப்பட்டுள்ள மாணவர்களின் அடைவினை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படவேண்டிய ஆய்வு முறைகள் ஊடாவும் இக்கட்டுரைத் தொகுதி ஆசிரியர்களுக்கு சிறந்த வழிவகைகளையும், முறைகளைக் காண்பிக்கின்றன என்றே கூறலாம்.

இவற்றுடன் இணைந்ததாக காணப்படும் ஆறாவது அத்தியாயத்தினுடாக பாடந்திட்டமிடல் தொடர்பாகவும், சிறந்த விளக்கங்களுடன் கூடியவாறு பாடக்குறிப்பு மாதிரி ஒன்றையும், கணிப்பீடு மதிப்பீட்டுக்கான நியதிகளையும் தந்துள்ளதோடு சிறந்த பாடசாலையின் பண்புகள், கலைத்திட்ட பிரயோகம் போன்றவற்றையும் சிறப்பித்துக் கூறுகின்றது இந்நூல். ஏழாவது அத்தியாயத்தில் கல்வியின் பூரணத்துவம் பற்றிய காட்சி சம்பந்தமாகவும் எழுதியுள்ளார். கல்வி சம்பந்தமாக பல்வேறு தலைப்புக்களில் ஆய்கின்ற இந்நூல் இன்றைய கல்விப்புலத்தில் கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக அமையும் என்பதில் எவ்விதமான ஐயமுமில்லை. சிறந்த எழுத்தாற்றல், சிறந்த முறையிலான கருத்தாளமிக்கதான உதாரணங்களுடன் கல்வித்தத்துவார்த்திகளின் கூற்றுக்களுடன் இந்நூல் இரண்டாவது வெளியீடாக வெளிவந்துள்ளது நவீன கற்றல் கற்பித்தலும் முறையியல்களும் எனும் நூலாகும்.

நூலின் அணிந்துரையை பேராசியர் சபா, ஜெயராசா அவர்கள் வழங்கியுள்ளார். அனைவருக்கும் பயன்படக்கூடிய அகல்விரி ஆக்கமாக இந்நூல் அமைந்துள்ளது எனக் கூறுகின்றார் பேராசிரியர் சபா, ஜெயராசா. கற்பித்தலை தம் குருதியோடும் தசைகளோடும் இணைந்து வாழ்க்கையாக்கி தம்மையே அர்ப்பணித்து பாடசாலைகளில் கல்விப் பணியாற்றிக் கொண்டிருந்த வேளையில் இன வன் முறைகளாலும், யுத்தத்தாலும் தம் இன்னுயிரை இழந்த ஆசிரியத் தெய்வங்களுக்கு சமர்ப்பிக்கும் இந்நூல் ஆசிரிய வாண்மைத்துவத்திற்கு சிறந்த ஓர் அடிப்படையான அம்சங்கள் கொண்ட பல்முகப்பார்வையுடன் இந்நூல் விளங்குகின்றது. ஒவ்வொரு ஆசிரியரினதும் கற்றல் கற்பித்தல் தொடர்பான தெளிவினைப் பெறுவதற்கு இந்நூலைப் ஆவணமாக்கிக் கொள்வது அவசியமாகும்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :