எஸ்.எச்.எம். ஜெமீல் நினைவுப் பேருரை...!

முனீரா அபூபக்கர்-
றைந்த கல்விமான் எஸ்.எச்.எம். ஜெமீல் அவர்களின் நினைவுப் பேருரையும் அவர் தொகுத்து வைத்திருந்த சுவடி ஆற்றுப்படை ஐந்தாம் பாகம் நூல் வெளியீடும் எதிர்வரும் 30-04-2016 அன்று பி.ப 4.00 மணிக்கு கொழும்பு தமிழ்ச்சங்க சங்கரப் பிள்ளை மண்டபத்தில் நடைபெறும்.

”இளம் வளர்ந்தோர் இலக்கியம்” என்ற தலைப்பில் பேராசிரியர். சபா ஜெயராஜா நினைவுப் பேருரை நிகழ்த்துவார். வரவேற்புரையை ஏ. பீர்முகம்மதும் நூல் அறிமுக உரையை வைத்தியக் கலாநிதி தாஸிம் அகமதும் வழங்கவுள்ள இந்நிகழ்வுக்கு பேராசிரியர். எம்.எஸ்.எம். அனஸ் தலைமை தாங்குவார். 

கலைவாதி கலீல் இரங்கற்பாப்பொழிவு செய்வார். காத்தான்குடி பௌஸ் மௌலவியின் துஆப் பிரார்த்தனையுடன் நிறைவு பெறவுள்ள இந்நிகழ்வில் நஸீல் ஜெமீல் நன்றியுரை வழங்குவார். 44A, ஆசிரி மாவத்தை, களுபோவிலை, தெகிவளையிலுள்ள இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணிப்பகம் நிகழ்ச்சி ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -