வீதி அபிவிருத்தி பணிகள் நடைபெறும் இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வீதி சமிக்ஞைகள். அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ



ஊடகப் பிரிவு
நெடுஞ்சாலை அமைச்சு-

வீதி அபிவிருத்தி பணிகள் நடைபெறும் இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வீதி சமிக்ஞைகள் , பாதுகாப்பு விளக்குகள், எச்சரிக்கை விளக்குகள் போன்றவை உடனடியாக நிறுவுமாறு நெடுஞ்சாலை அமைச்சின் செயலாளர் டபிள்யூ. பிரேமசிறி, வீதி அபிவிருத்தி அதிகாரசபை தலைவர் சமிந்த அதலுவகே, வீதி அபிவிருத்தி அதிகாரசபை பணிப்பாளர் நாயகம் சர்தா வீரகோன் மற்றும் அனைத்து மாகாண பணிப்பாளர்களுக்கு நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆலோசனை வழங்கினார். போக்குவரத்து கட்டுப்பாட்டு சமிக்ஞைகளுக்காக உரிய ஊழியர்களை ஈடுபடுத்துமாறும் வேகத்தை கட்டுப்படுத்த தற்காலிக வீதித் தடைகளை அமைக்குமாறும் அமைச்சர் மேலும் அறிவுறுத்தினார்.

2021-09-19 அன்று சூம் தொழில்நுட்பத்தில் மூலம் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். வீதி அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்வதற்ககாக தான் கண்காணிப்பு சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு வருவதாகவும் ஆபத்தான இடங்கள் தொடர்பாக சரியான எச்சரிக்கை சமிக்ஞைகள் சில இடங்களில் முறையாக நிறுவப்படவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார். அத்தோடு வேகத்தடைகள் கூட அமைக்கப்படவில்லை என அமைச்சர் சுட்டிக்காட்டினார் .வீதி அபிவிருத்தி மேற்கொள்ளப்படும் இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்கான எச்சரிக்கை சமிக்ஞைகள் மற்றும் வீதி சமிக்ஞைகளை ஒரு வாரத்திற்குள் உடனடியாக அமைக்குமாறு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அறிவுறுத்தினார்.
மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், பாரிய அபிவிருத்திகளை போன்றே பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பிலும் முன்னுரிமை வழங்கி செயற்படவேண்டும் என்றார். அதனால் சகல பொறியியலாளர்கள், சகல வீதி அபிவிருத்தியுடன் தொடர்புள்ள தரப்பினர் மற்றும் ஒப்பந்தக்காரர்களை இது தொடர்பில் அறிவூட்டுமாறும் அமைச்சர் குறிப்பிட்டார்.


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :