இலங்கை இராணுவத்தில் இளைஞர்களை இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், கிழக்கு மாகாணத்தில் பல இடங்களில் இதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, இராணுவத்தில் இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை, நாளை (21) தொடக்கம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 02ஆம் திகதி வரை வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளது.
இதில், 18-26 வயதுக்குட்பட்ட அனைத்து இன இளைஞர்களும் இணைந்து கொள்ள முடியும்.
அவ்வாறு இணைந்து கொள்ள வருகை தரும் இளைஞர்கள், தங்களின் தேசிய அடையாள அட்டையுடன் சமூகமளிக்குமாறு, இராணுவ அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
0 comments :
Post a Comment