இராணுவத்தில் இணைய நேர்முகப் பரீட்சை



எச்.எம்.எம்.பர்ஸான்-
லங்கை இராணுவத்தில் இளைஞர்களை இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், கிழக்கு மாகாணத்தில் பல இடங்களில் இதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, இராணுவத்தில் இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை, நாளை (21) தொடக்கம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 02ஆம் திகதி வரை வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளது.

இதில், 18-26 வயதுக்குட்பட்ட அனைத்து இன இளைஞர்களும் இணைந்து கொள்ள முடியும்.

அவ்வாறு இணைந்து கொள்ள வருகை தரும் இளைஞர்கள், தங்களின் தேசிய அடையாள அட்டையுடன் சமூகமளிக்குமாறு, இராணுவ அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :