பாடசாலை மாணவர்களுக்கு கல்வியமைச்சு வெளியிட்ட முக்கிய தகவல்!



ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-
பாடசாலை மாணவர்களுக்கு அரசாங்கம் டெப் கணனி இலவசமாக வழங்க நடவடிக்கை மேற்கொள்வதாகவும் அதற்காக பதிவு செய்வதற்கும் சந்தர்ப்பம் உள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் போலியானது என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கு டெப் கணினி வழங்குவது தொடர்பில் கல்வியமைச்சினால் அவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் மிகவும் பயனுள்ளதாகவும், இலகுவாகவும் மேற்கொள்வதற்காக டிஜிட்டல் கல்விக்கு உதவியாக டெப் கணினி வழங்குவதற்கு கல்வியமைச்சினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய பின்தங்கிய கிராமிய பாடசாலைகளில் தரம் 6 முதல் 11ம் ஆண்டு வரையிலான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு டெப் கணினி வழங்குவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மாணவர்களுக்கு இலவசமாக டெப் கணினி வழங்குவதாகவும் அதற்கான விண்ணப்பம் ஒன்று வட்ஸ்அப் மூலம் பகிரப்படுகின்றது. அதனை நம்ப வேண்டாம் என கல்வியமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வியமைச்சினால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ அறிக்கையில் குறிப்பிடப்படும் விடயங்களை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கல்வியமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :