மஹர சிறைச்சாலையில் நேற்று இரவு இடம்பெற்ற கலவரத்தை அடுத்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கைதிகளில் பலருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருக்கின்றது.
கலவரத்தினிடையே காயமடைந்த 71 கைதிகள் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் 48 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் 26 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக ராகம வைத்தியசாலை தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment