பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன்னர் கொவிட்19 சுகாதார நடை முறைகள் தொடர்பில் கலந்துரையாடல்


ஹஸ்பர் ஏ ஹலீம்-
பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன்னரான பாடசாலைச் சூழலை சுத்தமாக பேணுவதுடன் கொவிட்19 சுகாதார நடை முறைகளை பின்பற்றுதல் தொடர்பிலான கலந்துரையாடல் முள்ளிப் பொத்தானை மத்திய கல்லூரியில் இடம் பெற்றது.
குறித்த கலந்துரையாடலானது தம்பலகாம சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக ஏற்பாட்டில் முள்ளிப் பொத்தானை கோட்டக் கல்வி பணிப்பாளர் வி.எஹியா தலைமையில் இன்று (24) முள்ளிப் பொத்தானை மத்திய கல்லூரியில் இடம் பெற்றது.
இதில் பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன்னர் சுகாதார நடை முறைகளை பின்பற்றி சூழலை எவ்வாறு சுத்தப்படுத்தி வைத்திருத்தல் தொடர்பிலும் கொவிட்19 விழிப்புணர்வும் இதன் போது பேசப்பட்டது. குறித்த பாடசாலை சூழல் சுகாதார குழுவினரால் மேற்பார்வை செய்யப்படவுள்ளதாகவும் தம்பலகாம சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதில் பாடசாலை அதிபர்கள்,ஆசிரியர்கள்,சுகாதார பரிசோதகர்கள் என பலர் கலந்து கொண்டார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -