பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன்னரான பாடசாலைச் சூழலை சுத்தமாக பேணுவதுடன் கொவிட்19 சுகாதார நடை முறைகளை பின்பற்றுதல் தொடர்பிலான கலந்துரையாடல் முள்ளிப் பொத்தானை மத்திய கல்லூரியில் இடம் பெற்றது.
குறித்த கலந்துரையாடலானது தம்பலகாம சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக ஏற்பாட்டில் முள்ளிப் பொத்தானை கோட்டக் கல்வி பணிப்பாளர் வி.எஹியா தலைமையில் இன்று (24) முள்ளிப் பொத்தானை மத்திய கல்லூரியில் இடம் பெற்றது.
இதில் பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன்னர் சுகாதார நடை முறைகளை பின்பற்றி சூழலை எவ்வாறு சுத்தப்படுத்தி வைத்திருத்தல் தொடர்பிலும் கொவிட்19 விழிப்புணர்வும் இதன் போது பேசப்பட்டது. குறித்த பாடசாலை சூழல் சுகாதார குழுவினரால் மேற்பார்வை செய்யப்படவுள்ளதாகவும் தம்பலகாம சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதில் பாடசாலை அதிபர்கள்,ஆசிரியர்கள்,சுகாதார பரிசோதகர்கள் என பலர் கலந்து கொண்டார்கள்.