அம்பாறை மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருப்பது போன்று இறுக்கமான நடைமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர அலுவலகம் ஏற்பாடு செய்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (19.04.2020) நடைபெற்றது.
இந்த சந்திப்பின் போது பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பானர் டாக்டர் ஜி.சுகுணன் இவ்வாறு கருத்து வெளியிட்டார்...
CUT-01 (டாக்டர். குணசிங்கம் சுகுணன் - கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்)
ஒலுவில் துறைமுகப் பகுதியில் கடற்படையினரின் கண்காணிப்பில் 75 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 23 பேரின் மாதிரிகளை ஆய்வு செய்தபோது நேற்றய(18.04.2020) தினம் 03 பேருக்கு COVID -19 தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அக்கறைப்பற்றில் கொரோனா தொற்றுக்குள்ளான இரண்டு நபர்களுடன் நேரடி தொடர்பு வைத்த 200 பேர் உள்ளனர் என்றும் தெரிவித்தார்.