தெருவோரத்தில் யாசகம் கேட்போருக்கு உதவி-கல்முனை பொலிஸாரின் முன்மாதிரி

பாறுக் ஷிஹான்-

ல்முனையில் தெருவோரத்தில் யாசகம் செய்தவர்களுக்கு உதவி பொலிஸ் அத்தியட்சகர் புத்திக்க ஜெயசுந்தர நெறிப்படுத்தலில் உணவுப்பொதி வழங்கி வைக்கப்பட்டது.கொரோணா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பொலிஸ் பிராந்தியத்திற்குட்பட்ட பிரதான வீதிகள் பொது இடங்களில் யாசகர்கள் உணவின்றி சிரமப்பட்டு வருகின்றார்கள்.

இதனடிப்படையில் கடந்த சில தினங்களாக தொடரச்சியாக கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜீத் பிரியந்தவின் வழிநடத்தலில் குறித்த உணவு பொதிகள் வழங்கப்பட்டிருந்தது.அதன் தொடர்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை(19) மதியம் பொலிஸ் நிலைய நிருவாக பிரிவு பொறுப்பதிகாரி நுவரபக்க்ஷ விஜயரத்ன தலைமையிலான பொலிஸ் குழுவினர் சமைத்த உணவுகளை வழங்கி வைத்தனர்.

அத்துடன் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட காலங்களில் கூட கல்முனை பொலிஸ் நிலையத்தினால் வறிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -