ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு மத்திய தொகுதி அமைப்பாளர் பைசர் முஸ்தபா தலைமையில் மருதானை டெக்னிக்கல் சந்தியில் உள்ள கட்டிடத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெருமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்சவை ஆதரித்து தேர்தல் அலுவலகம் நேற்று 26 முன்னாள் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த, மகிந்த அமரவீர, முன்னாள் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால சிரேஸ்ட சட்டத்தரணி அலி சப்றி ஆகியோர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
இங்கு உரையாற்றிய ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி
எதிர்வரும்;; நவம்பர் 16ஆம் திகதி நூற்றுக்கு 65 வீதமான பௌத்த மக்களினால் கோட்டாபாய ராஜபக்ச ஜனாதிபதியாக வருவது உறுதிபடுத்தப்பட்டுவிட்டது. இதற்கு உதாரணம் கடந்த உள்ளுராட்சித் அல்பிட்டிய தேர்தல் முடிபு ஆகும். ஆகவே தான் இந்த நாட்டில் வாழும் சிறுபான்மைச் சமுகங்ளும்; மிகுதியாக இருக்கும் ஒரு, இரு வாரங்களுக்குள் நன்றாகச் சிந்தித்து நாமும் இந்த வெற்றியின் பங்குதாரர்களாகிக் கொள்ளுதல் வேண்டும். ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ச அவர்கள் நகர அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு அமைச்சின்; செயலாளர் கடமையாற்றிய காலத்தில் தான் இந்த கொழும்பு நவீனமயப்;படுத்தி அழகுபடுத்தினார். இன்றும் இதனை மக்கள் அனுபவிக்கின்றனர். அவர் மேற்கொண்ட தொடர் மாடி வீடமைப்புத் ;திட்டங்களையே இந்த அரசு திறந்த வைக்கின்ற நிகழ்வினை மட்டுமே நிகழ்த்துகின்றார்கள். . கொழும்பில் ;வாழும் வீடில்லாப் மக்களது பிரச்சினைகளுக்கு~ இந்த நல்லாட்சியில் ஒரு தீர்வையேனும் அல்லது ஒரு குடும்பத்திற்கு ஒரு வீட்டினையாவது பெற்றுக் கொடுக்க முடியவில்லை. கொழும்பு வாழ் சிறுபான்மைச் சமுகங்கள் காலத்துக்கு காலம் தேர்தல்களில் மட்டும் வாக்குகளை ஜ.தே.கட்சியினருக்கு அளிப்பதற்கு மட்டும் பாவிக்கப்பட்டு வருகின்றோம். தேர்தல் காலத்தில் நாம் வாக்கு அளித்தால் போதுமானது அந்த மக்களது பிரச்சினைகள் கடந்த 5 வருட காலத்தில் தீர்க்கப்படவில்லை. இந்த மக்கள் நாளாந்தம் தமது வாழ்வதாரத்திற்கும் தமக்கென்று ஒரு வீடில்லாமல் முடுக்கு வீடுகளில்கள் பல குடும்பங்கள் நாளாந்தம் கஸ்டங்களை எதிர்நோக்குகின்றனர்.
வடக்கு கிழக்கு வாழ் முஸ்லீம்கள் கடந்த யுத்த காலத்தில் நாம் அனுபவித்த துன்பங்களை சற்று மீட்டிப்பாருங்கள். மூதூரில் விடுதலைப்புலிகள் ;முஸ்லிம்களை வெளியேற்றியதும் .உடன் மூன்று நாட்களுக்குள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் அந்தப் பிரதேசத்திலிருந்து இரானுவத்திரைக் கொண்டு விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்;டெடுத்து மீள முஸ்லிம்களை குடியேற்றினார். அன்று வட கிழக்கில் வாழ்ந்த மக்கள் கேட்டதெல்லாம் அபிவிருத்தியோ, பாதைகயோ வீடோ அல்ல மகிந்தவிடம் கேட்டது இந்த நாட்டு வாழ் மக்கள் அமைதியாகவும் நிம்மதியாகவும் வாழ்வதற்கு இந்த இலங்கையை யுதத்திலிருந்து மீட்டெடுத்து தரும்படியே வேண்டி நின்றார்கள். அதனை அவர் உடன் நிறைவேற்றினார். இன்றும் நாம் நிம்மதியாகவும் சமாதான காற்றினை அனுபவித்து இந்த நாட்டில் வாழ்கின்றோம் என்றால் அது முன்னாள் ஜனாதிபதியும் மகிந்தவும் கோட்டபாய ராஜபக்ச ஆகியோர்கள் எடுத்த உறுதியன திடமான முடிபும் சீரான தலைமைத்துவமாகும்.
காலத்துக்கு காலம் தேர்தல் காலங்களில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீமும் றிசாத் பதியுத்தீனும் மொத்த வியாபாரிகள் போன்று இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்களை அடகு வைத்து அவர்கள் சுகபோகமாக வாழ்கின்றனர். இந்த யுத்த்தினால் பாதிக்கப்பட்டு வடக்கில் இருந்து அகதியாக சொப்பிங் பையுடன் புத்தளத்துக்கு வந்த றிசாத் பதியுத்தீன் இன்று எவ்வாறு உள்ளார். ஆனால் யுத்தினாலும் கஸ்டத்திலும் பாதிக்கப்பட்ட வடக்கு முஸ்லிம்கள் இன்றும் அதே துண்ப நிலையிலேயே வாழ்நது வருகின்றனர்;. இவ்வாறானவர்களுக்கு இம்முறையும் நாம் துனை போகாமல் நன்றாகச் சிந்தித்து தமது வாக்குளை கோட்டபாய ராஜபக்சவுக்கு வழங்கி நீங்கள் இந்த வெற்றியில் பங்குதாரர்களாகுங்கள்.
நான் கடந்த 15 வருடங்களாக கோட்டபாய ராஜபக்சவுடன் பழகிவருகின்றேன். அவருக்கு எதிரான சகல வழக்குகளிலும்; ஆஜராகி வருகின்றேன். அவர் ஒரு போதும் இனவாதி அல்ல. அவர் இலங்கையில் ~யுத்த களத்தில் 20 வருடங்களும் அமேரிக்காவில் 10 வருடங்களும் சேவை ஆற்றியவர் அவரிடம் சிறந்த தூர நோக்குள்ள உலக நிருவாக அனுபவம் கொண்டவர் இந்த அனுபவங்கள் ;இந்த நர்ட்டினை சீராக அழகுபடுத்தி இலங்கையை ஒரு கட்டமைப்பின் கீழ் கொண்டுவருவார் என்பது உறுதி என ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்றி தெரிவித்தார்.