நவீன முறையில் நிர்மானிக்கப்பட்ட பஞ்சகர்ம வைத்தியசாலையின் புதிய கட்டடம் திறப்பு

பைஷல் இஸ்மாயில் -

10 மில்லியன் ரூபா நிதியின் கீழ் நவீன முறையில் நிர்மானிக்கப்பட்ட திருகோணமலை கப்பல்துறை பஞ்சகர்ம வைத்தியசாலையின் புதிய கட்டடம் திறந்து வைத்து பொதுமக்கள் பாவனைக்கும் கையளித்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி ஆர்.ஸ்ரீதர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், ஆளுநரின் ஆலோசகருமான அரியவதி கலபதி பிரதம அதிதியாக கலந்துகொண்டு திறந்து வைத்து பொதுமக்கள் பாவனைக்கும் கையளித்து வைத்தார்.

இந்நிகழ்வில் சுகாதார சுதேச மருத்துவ அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார், ஆளுநரின் செயலாளர் அசங்க அபேவர்த்தண, ஆளணி மற்றும் பயிற்சி பிரதிப் பிரதம செயலாளர் திருமதி முரளிதரன், தினைக்களங்களின் தலைவர்கள், வைத்திய பொறுப்பதிகாரிகள், வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் இதில் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -