கல்முனை சாஹிரா கல்லூரி மாணவர்களுக்கு நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி



ம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால், வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலின் கீழ், பாடசாலை சாதாரண தர மற்றும் உயர்தர மாணவர்களிடையே நுகர்வோர் விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று 2026.06.09 ஆம் திகதி கல்முனை சாஹிரா கல்லூரி (தேசிய பாடசாலை) வளாகத்தில் நடைபெற்றது.

பாடசாலை அதிபர் எம்.ஐ. ஜாபிர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.ஏ. வாஹீட் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்தார். மேலும் பிரதி அதிபர்களான தண்சீல், முபாறக் மற்றும் சாதாரண தரப் பகுதித் தலைவர் அஜ்மல் ஹூசைன் ஆகியோரின் வழிகாட்டல் மற்றும் ஒத்துழைப்புடன் நிகழ்ச்சி வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.

நிகழ்வின் போது நுகர்வோர் உரிமைகள், நுகர்வோர் பொறுப்புகள், நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான சட்ட ஏற்பாடுகள், பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெறும் போது கவனிக்க வேண்டிய அம்சங்கள், தற்போதைய சந்தையில் அரசாங்கத்தினால் கட்டுப்படுத்தப்பட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக மாணவர்களுக்கு விளக்கக்காட்சி ஊடாக தெளிவுபடுத்தப்பட்டது.

அத்துடன், நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் சட்டப் பணிகள், நுகர்வோர் முறைப்பாடுகளை கையாளும் நடைமுறைகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்தும் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதான வளவாளர்களாக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் புலனாய்வு உத்தியோகத்தர்களான முஹம்மட் ஸாஜீத் ஸமான் மற்றும் ஏ.பி.எம். இர்பான் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பயனுள்ள விளக்கங்களையும் ஆலோசனைகளையும் வழங்கினர்.

மேலும், உயர்தரப் பிரிவு ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்விச் சமூகத்தினரும் நிகழ்வில் பங்கேற்று மாணவர்களின் நுகர்வோர் விழிப்புணர்வை மேம்படுத்தும் இந்த முயற்சிக்கு தங்களது பூரண ஆதரவை வழங்கினர்.

மாணவர்களிடையே பொறுப்புணர்வுள்ள நுகர்வோர் பண்பாட்டை உருவாக்குவதற்கான முக்கியமான முயற்சியாக அமைந்த இந்நிகழ்வு, அவர்களின் அறிவையும் விழிப்புணர்வையும் மேம்படுத்திய பயனுள்ள நிகழ்வாக அமைந்தது.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :