காத்த‌முத்துவின் கூற்றுக்கு ப‌ய‌ந்து வ‌ழ‌க்கை வாப‌ஸ் வாங்க‌ முஸ்லிம் காங்கிர‌ஸ் முய‌ற்சி எடுக்க‌ கூடாது- முபாற‌க் அப்துல் ம‌ஜீத்


க‌ல்முனை உப‌ பிர‌தேச‌ செய‌ல‌க‌ வ‌ள‌வில் ச‌ட்ட‌த்தின் அனும‌தியின்றி க‌ட்ட‌ப்ப‌ட்ட‌ ஆல‌ய‌த்தை நீதிம‌ன்ற‌ தீர்ப்பின் மூல‌ம் நீக்க‌ப்ப‌டுமாயின் தான் பிர‌தி மேய‌ர் ப‌த‌வியை ராஜினாமா செய்வேன் என்ற‌ க‌ல்முனை பிர‌தி மேய‌ர் காத்த‌முத்துவின் கூற்றுக்கு ப‌ய‌ந்து வ‌ழ‌க்கை வாப‌ஸ் வாங்க‌ முஸ்லிம் காங்கிர‌ஸ் முய‌ற்சி எடுக்க‌ கூடாது என‌ உல‌மா க‌ட்சி கேட்டுக்கொண்டுள்ள‌து.
இது ப‌ற்றி உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் கூறிய‌தாவ‌து,

க‌ல்முனை மாந‌க‌ர‌ச‌பையில் முஸ்லிம் காங்கிர‌சும் அ.இ. ம‌க்க‌ள் காங்கிர‌சும் இணைந்து ஆட்சிய‌மைக்க‌ அமைச்ச‌ர் ரிசாத் ப‌தியுதீன் உள‌ச்சுத்தியுட‌ன் முய‌ற்சி எடுத்த‌ போது அவ‌ற்றை புற‌ந்த‌ள்ளிவிட்டு த‌மிழ‌ர் கூட்ட‌ணியுட‌ன் சேர்ந்து ஆட்சியை பிடித்து காத்த‌முத்து என்ப‌வ‌ருக்கு பிர‌தி மேய‌ர் ப‌த‌வி கொடுத்து அழ‌கு பார்த்த‌ன‌ர் ஸ்ரீ ல‌ங்கா முஸ்லிம் காங்கிர‌சின‌ர். ஆனால் இப்போது வேலியில் கிட‌ந்த‌ ஓணானை பிடித்து சசார‌த்துக்குள் விட்ட‌து போன்று காத்த‌முத்துவின் ராஜினாமா அச்சுறுத்த‌ல் உள்ள‌து.

மேற்ப‌டி ஆல‌ய‌ம் அனும‌திய‌ற்ற‌ முறையில் இர‌வோடிர‌வாக‌ க‌ள்ள‌த்த‌ன‌மாக‌ க‌ட்ட‌ப்ப‌ட்ட‌த‌ற்கு நியாய‌ம் தேடி க‌ல்முனை மேய‌ர் நீதிம‌ன்ற‌ம் போன‌து ச‌ரியான‌தே. உண்மையில் காத்த‌முத்து இந்த‌ நாட்டின் ச‌ட்ட‌த்தை ம‌திப்ப‌வ‌ராயின் எதுவாக‌ இருப்பினும் நீதியின் முடிவை ஏற்பேன் என‌ கூறியிருப்பாராயின் அவ‌ர் நியாய‌மான‌வ‌ராக‌ இருந்திருப்பார். ஆனால் நீதியின் மூல‌ம் ஆல‌ய‌ம் நீக்க‌ப்ப‌ட்டால் ப‌த‌வி துற‌ப்பேன் என‌ கூறியுள்ள‌த‌ன் மூல‌ம் அவ‌ர் நாட்டின் ச‌ட்ட‌த்துறையை அவ‌ம‌தித்துள்ளார். இத்த‌கைய‌ ஒருவ‌ர் க‌ல்முனையின் பிர‌தி மேய‌ராக‌ இருப்ப‌தை விட‌ அவ‌ர் ராஜினாமா செய்வ‌தே ந‌ல்ல‌து.
ஏற்க‌ன‌வே நீதியின் மூல‌ம் இவ்வால‌ய‌ம் நீக்க‌ப்ப‌டும் என்ப‌தை தெரிந்து த‌மிழ் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர் ஒருவ‌ர் ர‌வூப் ஹ‌க்கீம் மூல‌ம் வ‌ழ‌க்கை வாப‌ஸ் வாங்க‌ முய‌ற்சி செய்தார். இத‌னை உல‌மா க‌ட்சியும் க‌ல்முனை ம‌க்க‌ளும் க‌டுமையாக‌ எதிர்த்த‌தால் இப்போது காத்த‌ முத்து மூல‌ம் சாதிக்க‌ முணைகிறார்க‌ள். அவ‌ரை காட்டி வ‌ழ‌க்கை வாப‌ஸ் வாங்கும் க‌ள்ள‌த்த‌ன‌த்தை முஸ்லிம் காங்கிர‌ஸ் செய்ய‌வும் த‌ய‌ங்காது என்ப‌தும் உண்மை. ஆனாலும் க‌ல்முனை ம‌க்க‌ள் விழிப்பாக‌ இருந்தால் இத‌னை முறிய‌டிக்க‌ முடியும்

ஆக‌வே முஸ்லிம் காங்கிர‌ஸ் இவ‌ர‌து ராஜினாமா அச்சுறுத்த‌லுக்கு அஞ்சி வ‌ழ‌க்கை வாப‌ஸ் பெற‌க்கூடாது என‌ நாம் கேட்டுக்கொள்வ‌தோடு அவ்வாறு அவ‌ர் ராஜினாமா செய்யும் ப‌ட்ச‌த்தில் அ.இ. ம‌க்க‌ள் காங்கிர‌சின் ஆத‌ர‌வை பெற‌ மு. கா முய‌ற்சிப்ப‌தே க‌ல்முனை ம‌க்க‌ளுக்கு செய்யும் பேருப‌கார‌மாகும்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -