விமானப்பணி பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு பிணை



டுபாயிலிருந்து இலங்கையை நோக்கி பறந்து கொண்டிருந்த எமிரேட்ஸ் விமானத்தில் விமானப் பணிப்பெண்ணான 39 வயதுடைய தென்னாப்ரிக்கா பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக (2025.04.28) அன்று இலங்கை பிரஜையான சந்தேக நபர் கட்டுநாயக பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

சந்தேகநபர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 49 வயதுடைய கப்பல் கெப்டன் ஆவார். சம்பவம் இடம் பெற்ற வேளை சந்தேகநபர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்தமை நீர்க்கொழும்பு நீதிமன்ற வைத்திய அதிகாரிகளால் பரிசோதிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டது.

(2025.04.29) ஆம் திகதி சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு (2025.05.02) ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இது குறித்த வழக்கு (2025.02.02) கொழும்பு பிரதம நீதிவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது . இதன் போது சந்தேக நபரின் சார்ப்பில் சட்டத்தரணி ஆஸாத் ஆதம் லெப்பை மற்றும் சட்டத்தரணி வசீம் அம்ஹர் ஆகியோர் ஆஜராகி தன் பக்க வாதங்களை முன்வைத்தனர்.

விடயங்களை ஆராய்ந்த கொழும்பு பிரதம நீதிவான் சந்தேக நபரை பிணையில் விடுவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :