நாம் வழங்கும் குர்பானிகளில் ஏழைகளையும் இணைத்து கொள்வோம். ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் யஹியாகான்.



லக வாழ் முஸ்லிம்களின் அனைத்து பிரச்சினைகளும் நீங்கி - அனைத்து சவால்களையும் தியாக சிந்தையோடு எதிர்கொள்ளும் ஆற்றலை அல்லாஹ் வழங்க வேண்டுமென இன்றைய “ஈதுழ்;அழ்ஹா” பெருநாள் தினத்தன்று பிரார்த்திப்போம் என ஐக்கிய மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம்

ஏ.சி. யஹியாகான் விடுத்துள்ள ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அவரது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இறைதூதர்களான நபி இப்ராஹிம் (அலை), நபி இஸ்மாயில் (அலை), அன்னை ஹாஜரா ஆகியோரின் தியாகத்தை பிரதிபலிக்கும் ஹஜ் கடமை என்பது தியாகத்தையும் சகிப்புதன்மையையும் அதிகம் வலியுறுத்தும் இறுதிக் கடமையாகும்.
இலங்கை முஸ்லிம்கள் - இந்த நாட்டிற்காக ஆற்றிய அனைத்து வகையான தியாகங்களும் போற்றுதலுக்குரியது.

தியாகத்தை வலியுறுத்தும் இந்நாளில் தியாகத்தையும் சகிப்புத் தன்மையையும் கடைப்பிடித்து இப் பெருநாளை கொண்டாடுவோம்.

நாம் வழங்கும் குர்பானிகளில் ஏழை மக்களை அதிகளவில் இணைத்துக் கொண்டு - அனைவரும் பெருநாள் தினத்தை நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் கொண்டாடுவோம். எமது குர்பானிகளை இறைவன் அங்கீகரித்துக்கொள்ள பிரார்த்திப்போம்.

உலகவாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் எனது இனிய ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

ஈத் முபாரக்....

ஏ.சி. யஹியாகான்
செயலாளர் நாயகம்
ஐக்கிய மக்கள் காங்கிரஸ்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :