கந்தளாயில் புதையல் தோண்டிய எட்டு பேர் கைது...


அப்துல்சலாம் யாசீம்-

ன்தளாய்-சூரியபுர பொலிஸ் பிரிவிற்குற்பட்ட சமகிபுர வயல் பகுதியில் புதையல் தோண்டிய எட்டு பேருடன் தோண்டுவதற்கு பயன்படுத்திய உபகரணங்களையும் சனிக்கிழமை (29)
கைப்பற்றியுள்ளதாக கன்தளாய் ​பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் சூரியபுர-சமகிபுர பகுதியைச்சேர்ந்த ஏழு பேரும் ஹபரண பகுதியைச்சேர்ந்த ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கன்தளாய் பிரதேசத்திற்கு பொறுப்பான குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அவ்விடத்திற்கு விரைந்த போது எட்டு பேர் கைது செய்யப்பட்டதாகவும் சிலர் தப்பியோடியதாகவும் அவர்களை கைது செய்வதற்குறிய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் கன்தளாய் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட எட்டு பேரையும் கன்தளாய் நீதிமன்ற நீதவான் துசித தம்மிக முன்னிலையில் ஆஜர்படுத்திய வேளை எதிர்வரும் 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -