நாம் வார்த்தைகளுக்கு அடியமையானால் இறுதியில் உயிரையும் பறிக்கும் -வீடியோ

தேவையற்ற ஒன்றுக்காக முச்சக்கர வண்டி சாரதிக்கும் பால் விற்பனையாளருக்கு இடையே இடம்பெற்ற மோதலில் முச்சக்கர வண்டி சாரதி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் மேற்கு இந்தியாவின் ராஜஸ்தான் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

ராஜஸ்தான் பகுதியில் உள்ள சந்தையொன்றில், முச்சக்கர வண்டி சாரதியொருவர் தனது முச்சக்கர வண்டியை பாதையின் மறுபுறமாக திருப்ப முற்பட்டார். இதன்போது மோட்டார் சைக்கிளில் எதிரே வந்த பால் விற்பனையாளர் முச்சக்கர வண்டி சாரதியை திட்டியுள்ளார்.

பின்னர் பால் விற்;பனையாளர் முச்சக்கர வண்டி சாரதியை தாக்க முற்பட்ட போது அருகில் இருந்தவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தியுள்ளனர்.

பின்னர் பால் விற்பனையாளர் தனது மோட்டார் சைக்கிளில் அமர்ந்தவாறு முச்சக்கர வண்டி சாரதியை திட்டியுள்ளார்.

மீண்டும் கோபமடைந்த முச்சக்கர வண்டி சாரதி கூரிய ஆயுதமொன்றினால் பால் விற்பனையாளரை குத்த முயன்றுள்ளார்.

எனினும் அருகில் இருந்தவர்கள் இதனை தடுத்துள்ளனர். சிறிது நேரத்தில் பால் விற்பனையாளர் கீழே கிடந்த கொங்ரீட் துண்டு ஒன்றை எடுத்து முச்சக்கர சாரதியின் தலையில் மீது எறிந்துள்ளார்.

இதில் படுகாயமடைந்த 36 வயதுடைய முச்சக்கர வண்டி சாரதி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய 40 வயதுடைய பால் விற்பனையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காணொளி வெளியாகியுள்ளது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -