சம்மாந்துறை பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தொற்றா நோய் பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு



பாறுக் ஷிஹான்-
ம்மாந்துறை பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தொற்றா நோய் பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி (MOH) குழுவினரால் வியாழக்கிழமை(22) முன்னெடுக்கப்பட்டது.

இதற்கமைய அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பிராந்திய சுகாதார சேவை பணிமனையின் பணிப்பாளர் வழிகாட்டல்களுக்கமைய சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம். நௌசாத் தலைமையில் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸாரின் போசாக்கு அளவிடப்பட்டு உடற் திணிவுச் சுட்டெண் (BMI)கணிப்பு ,குருதி அழுத்தம்,இரத்த சீனி அளவு,இடுப்புச் சுற்றளவு, உயரத்திற்கேற்ற நிறையின் அவசியம் தொடர்பான கருத்தாடல்களுடன் உத்தியோகத்தர்களுக்கு தனிப்பட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் பொதுச்சுகாதார பரிசோதகர் சுகாதார ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.





எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :