இதன் ஒரு பகுதியாக சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைமை அலுவலகத்தில் தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சி இன்று (15-08-2022) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாநில தலைவர் முஹம்மது சேக் அன்சாரி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி உரையாற்றினார்.
மாநில செயலாளர் நாகூர் மீரான், சென்னை மண்டலசெயலாளர் அஹ்மத் முஹைதீன் (எ) குட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சென்னை மண்டலத் தலைவர் பக்கீர் முஹம்மது சுதந்திர தின உறுதிமொழியை முன்மொழிய பொதுமக்கள் அனைவரும் சுதந்திரத்தை பேணிப்பாதுகாக்க உறுதிமொழி எடுத்தனர்.
தென் சென்னை மாவட்டத் தலைவர் அபூபக்கர் சாதிக் நன்றி கூறினார்.
மக்கள் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் அப்துல் ரசாக் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட, பகுதி நிர்வாகிகள், செயல்வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment