தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் உள்ளதாகவும், அவர் அவரது சொந்த ஊரான வல்வெட்டித்துறைக்கு வருகை தர வேண்டும் எனவும் வடமாகாண மீன்பிடி அமைச்சர் ப.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் தைப்பொங்கலை முன்னிட்டு பட்டம் விடும் திருவிழா நேற்று வல்வெட்டி துறையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் உரையாற்றிய அவர்:
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் நல்ல நிலையில் வாழ வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.