ஹஸன் அலி விவகாரம் தொடர்பில் ஆராய்ந்து நியாயம் வழங்க குழு...!

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் உயர் பீட கூட்டம் இன்றிரவு (03) இடம்பெற்று சற்று நேரத்துக்கு முன்னர் நிறைவடைந்துள்ளது. முஸ்லிம் காங்கிரஸ் அதிருப்தி அணியைச் சேர்ந்தவர்கள் என சித்திரிக்கப்படும் கட்சியின் செயலாளர் நாயகமான எம்.ரீ.ஹஸன் அலி மற்றும் கட்சியின் தவிசாளர் பஷீர் ஷேகு தாவூத் உட்படலானவர்களும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களுடன் ஹஸன் அலி மற்றும் பஷீர் ஷேகு தாவூத் உட்படலான அனைவரும் மிக நெருக்மான முறையில் கலந்துரையாடி தங்களது கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

அண்மைக் காலமாக கட்சிக்குள் எரிமலையாக கொதித்துக் கொண்டிருக்கும் கட்சியின் செயலாளர் நாயகமான எம்.ரீ. ஹஸன் அலி விவகாரம் தொடர்பில் ஒரு குழுவை நியமித்து அதன் மூலம் அவருக்கு நியாயத்தை வழங்குவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -