ஓர் வெளி நாட்டு வாழ் மகனை எதிர் பார்த்து கொண்டிருக்கும் ஓர் தாயின் உள்ளக்குமுறல்....!

கனே.......! 
நீ பிறந்த அன்று வீட்டின் கொல்லைப் புரத்தில் ஓர் தென்னையை நட்டி வைத்தேன்

நாங்கள் ஊற்றிய தண்ணீரில் தென்னை வளர்ந்தது
நாங்கள் சிந்திய கண்ணீரில் நீ வளர்ந்தாய்

எங்கோ இருந்து ஈட்டக் கூடிய பொருள் உனக்கு சுகத்தை தருகிறது
அருகிலயே இருக்கும் தென்னை எங்களுக்கு சுவை நீரும் சுக நிழலும் தருகிறது

பரவாயில்லை மகனே.....!
என்றாவது ஓர் நாள் நீ வருவாய் வருவாய் என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏங்கிப் போனேன் இன்று எங்கள் உடல் முழுவதும் ஈ மொய்த்த செய்தி வந்திருக்கும்
அப்போதும் நீ ஈ மெயிலில்தான் மூழ்கிப் போயிருக்கிறாய்

எங்களுடைய இறுதி கூட்டத்தில் நீ கலந்து கொள்ளாமல் போனாலும் 
நீ என்று நாங்கள் நினைத்து வளர்த்த தென்னை எங்களை ஓழையாக மாற்றி ஊர் எல்லை வரை கொண்டு சேர்க்கும் 

அழாதே........
இப்படிக்கு அம்மா

ஆங்கிலத்திருந்து மொழி பெயர்க்கப்பட்ட கவிதை.
-mohamed fairoos-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -