தேசிய செய்திப் பத்திரிகை விநியோகம் செய்யும் முகாமையாளர்களின் 9 வது அண்டு நிறைவு ஒன்றுகூடல்..!

அபுஅலா –
கில இலங்கை ரீதியாக தேசிய செய்திப் பத்திரிகை விநியோகம் செய்யும் முகாமையாளர்களின் 9 வது அண்டு நிறைவு ஒன்று கூடல் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை (13) கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு அருகிலுள்ள இலங்கை மன்ற கல்லூரி மண்டபத்தில் இடம்பெறவுள்ளன.

நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் சிறிமல் பீரீஸ் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பாராளுமன்ற குழுக்களின் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால மற்றும் வெகுஜன ஊடக, பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.

இந்நிகழ்வில் பிரபல மேடை நாட்டிய தாரகைகளின் நடன நிகழ்வும், முகவர்களுக்கான கலை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளது. இதில் குலுக்கல் சீட்டிழுப்பு மூலம் தெரிவு செய்யப்படும் செய்தி முகவர்களுக்கு பெறுமதிமிக்க பரிவுகளும் வழங்கி வைக்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -