எஸ்.எச்.எம்.வாஜித்-
வித்தியாவின் பாலியல் கொலையினை கண்டித்து முசலி பிரதேச யாழ்ப்பாணம் புங்குடுதீவு பாடசாலையின் உயர் தர மாணவியான சிவலோகநாதன் வித்தயா கடந்த சில நாட்களுக்கு முன்பு காடையர்களினால் பாலியல் பலாத்தகாரம் செய்து படு கொலை செய்யப்பட்டார்.
இதனை கண்டித்து இன்று காலை 10 மணிக்கு மன்னார் -முசலி பிரதேசத்தில் உள்ள முசலி தேசிய பாடசாலை மற்றும் சிலாவத்துறை பாடசாலை மாணவர்கள் அத்துடன் ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை சிலாவத்துறை பிரதான சந்தியில் இருந்து ஆரம்பித்தார்கள்.
மாணவர்கள் ஆசிரியர்கள் தெரிவிக்கையில் இப்படியான கொலைகள் கண்டிக்கப்பட வேண்டும் என்றும் இனிமேல் இப்படியான கொடுமைகள் இடம்பொறாமல் இருக்க உரிய அதிரகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மிகவும் கண்டிப்பான வேண்டுகளை விடுத்தார்கள்.


