புங்குடுதீவு மாணவியின் கொலையுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு மிக விரைவில் அதி உச்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் எனக் கோரி வட மாகாணம் முழுவதிலும் இன்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.
இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் இந்த ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்தது.
இந்த நிலையில், யாழ் குடநாட்டின் அனைத்துக் கடைகளும் மூடப்பட்டு கறுப்புக்கொடிகள் தொங்க விடப்படுட்டுள்ளன.
பாடசாலைகளுக்கு மாணவர்கள் வருகைதரவில்லை. தனியார் போக்குவரத்து பஸ்களும் தமது சேவைகளை இடைநிறுத்தியுள்ளன. வீதிகளில் மக்கள் நடமாட்டம் குறைவடைந்து காணப்படுகிறது.(ந)
