காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் 2014 கடந்த அரை வருடத்துக்கான பொலிஸ் பரிசோதனை-படங்கள்.





பழுலுல்லாஹ் பர்ஹான்-

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் 2014ம் ஆண்டு கடந்த அரை வருடத்துக்கான பொலிஸ் பரிசோதனை மற்றும் அணிவகுப்பு மரியாதை நிகழ்வு கடந்த 16-02-2015 திங்கட்கிழமை நாவற்குடா ஜீவ ஒளி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இவ் பொலிஸ் பரிசோதனை மற்றும் அணிவகுப்பு மரியாதை நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.பி. உபாலி ஜெயசிங்க கலந்துகொண்டு மேற்படி பொலிஸ் பரிசோதனை மற்றும் அணிவகுப்பு மரியாதையையும் பார்வையிட்டார்.

இங்கு பொலிஸ் பரிசோதனை விளையாட்டு மைதானத்திலும்; பொலிஸ் வாகன பரிசோதனை காத்தான்குடி பொலிஸ் நிலையத்திலும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில்; காத்தான்குடி பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எஸ்.பி. தசநாயக்க,காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.பி.வெதகெதர உட்பட காத்தான்குடி பொலிஸ் நிலையத்திலுள்ள பல்வேறு பிரிவுகளின் பொறுப்பதிகாரிகள்,பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -