கிண்ணியாவில் பாவனைக்கு உதவாத மீன்கள் விற்பனை!

கிண்ணியா தோனா கடற்கரை மீன் சந்தையில் பாவனைக்கு உதவாத 150 கிலோவிற்கு அதிகமான மீன்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

விற்பனைக்கு தயாரான நிலையில் வைக்கப்ட்டிருந்த இந்த பெருந் தொகை மீன்களை கிண்ணியா வைத்திய சுகாதார அதிகாரி மற்றும் பொது சுகாதார அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் கைப்பற்றி அழித்துள்ளனர்.

கிண்ணியா வைத்திய சுகாதார அதிகாரிக்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய சுற்றி வளைப்பு மேற் கொள்ளப்பட்டு மீன்கள் கைப்பற்றப்பட்டதாக வைத்திய சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.

பழுதான நிலையில் உள்ள மீன்கள் குறைந்த விலையில் விற்கப்படுவதால் புதிய மீன்களுக்கும் குறைந்த விலையிலேயே மக்கள் பேரம் பேசுவதாக தெரிவிக்கிப்படுகின்றது.

இதனால் புதிய மீன் விற்கும் வியாபாரிகளும் பாதிப்பை எதிர் நோக்குவதாக தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -