சாயந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் அமைந்துள்ள எம். எஸ். காரியப்பர் வித்தியாலயத்தின் தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் வித்தியாரம்ப விழா பாடசாலை அதிபர் எம். ஆரிப் அவர்களின் தலைமையில் நேற்று இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தேர்தல் மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் உறுப்பினர், முன்னாள் சாய்ந்தமருது பிரதேச செயலாளர், இப்பாடசாலையின் ஸ்தாபகர் ஏ.எல்.எம்.சலீம் அவர்கள் கலந்து கொண்டார்.
சாய்ந்தமருது பிரதேச செயலாளராக ஏ.எல்.எம்.சலீம் இருந்து ஆரம்பிக்கப்பட்ட இரண்டு பாடசாலைகளில் லீடர் அஷ்ரப் வித்தியாலயம், காரியப்பர் வித்தியாலயம் என்பன இன்று ஏனைய பாடசாலைகளைப் போல் பல நூற்றுக் கணக்கான மாணவர்களுடன் இயங்குவது மனதுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார். இப்பாடசாலைகளின் ஆரம்பப் பருவம் மிகவும் சவால் மிக்கதாக் காணப்பட்டது.
இன்று 13 வருடங்களின் காரியப்பர் வித்தியாலயம் மிகவும் முன்னேறிய நிலையில் சிறந்த ஆசிரியர் குழுவினருடன் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
நவீன போட்டிமிகு கல்வியின் முக்கியத்துவம் உணரப்பட்ட நிலையில் மாணவர்கள் திறம்பட கற்று முன்னேறுதோடு, ஒழுக்கத்திலும் முன்னறே இக்காலப்பகுதி மிக முக்கியம் வாய்ந்தது என்று கூறினார் அத்தோடு
எதிர்காலத்தில் இக்கல்லூரி தலை சிறந்த பாடசாலையாக வளர வாழ்த்தினார்.
இந்நிகழ்வில் இப்பாடசாலையின் ஸ்தாபக அதிபர் ஏ.எல்.ஏ.நாபீத் , ஆசிரிய ஆலோசகர் ஏ.ராசீக் உட்பட பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், சிரேஷ்டமானவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment