வேன் - உழவு இயந்திரம் விபத்து; ஒருவர் படுகாயம் - ஓட்டமாவடி பொது நூலக மதிலுக்கு சேதம்!



எச்.எம்.எம்.பர்ஸான்-
வேனும் உழவு இயந்திரமும் நேற்று (27) சனிக்கிழமை காலை விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பொது நூலகத்துக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

இவ் விபத்தில் செங்கற்களை ஏற்றி வந்த உழவு இயந்திரம் வேனுடன் மோதி உழவு இயந்திரம் ஓட்டமாவடி பொது நூலக மதிலை உடைத்துக் கொண்டு நூலக வளாகத்தில் புகுந்துள்ளது.

இவ் விபத்தில் உழவு இயந்திர சாரதி படுகாயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடாமாற்றப்பட்டுள்ளார்.

இதில், பொது நூலக மதில் மற்றும் வடிகான் ஆகியவை சேதமடைந்துள்ளன.

இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :