காட்டு யானையின் தொடர்ச்சியான தாக்குதலால் மஹியங்கன பிரதேச மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதில் தயக்கம்




அஸ்ஹர் இப்றாஹிம்-
ஹியங்கன மகாவலி கங்கை பிரதேசத்திலிருந்து பகலிலும் இரவிலும் கூட்டம் கூட்டமாக வரும் காட்டு யானைகளின் அட்டகாசத்தால் மஹியங்கன தேசிய பாடசாலை மற்றும் சித்தாத்த கனிஷ்ட வித்தியாலயம் ஆகியவற்றின் பிரதான நுழைவாயில் மதில்கள் உடைக்கப்பட்டு அழகுக்காக பாடசாலை சூழலில் நடப்பட்டுள்ள மரங்களும் பூச்சட்டிகளும் மிகவும் மோசமாக தாக்கி சேதப்படுத்தப்பட்டுள்ளன.

தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற இச் செயற்பாடுகள் பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ கல்வித் திணைக்களமோ எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்காமலிருப்பது மிகவும் கவலையளிப்பதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

தமது பிள்ளைகளை காலை வேளையில் உணவு பார்சல்களோடு பாடசாலைக்கு அனுப்புவதில் பலவிதமான சிக்கல் தோன்றியுள்ளதுடன், பாடசாலைக்கு வேளைக்கு செல்வதிலும் பிள்ளைகள் தயக்கம் காட்டி வருவதாக பெற்றோர் மேலும் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :