தூய்மையான இலங்கை நிகழ்வு திட்டம்



ஹஸ்பர்-
திருகோணமலை,தம்பலகாமம் மீரா நகர் பகுதியில் "தூய்மையான இலங்கை" எனும் தொனிப்பொருளின் கீழ் மரநடுகை நிகழ்வொன்று இடம் பெற்றது.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்ட குறித்த நிகழ்வானது இன்று (03) காலை மீரா நகர் ஜூம்ஆ பள்ளிவாயல் வளாகத்தில் இடம் பெற்றது. இளைஞர் சேவை மன்றம் இதனை ஏற்பாடு செய்திருந்ததுடன் பள்ளிவாயல் வளாகத்தினுள் மரநடுகை இடம் பெற்றது. பசுமையான சூழலை உருவாக்கும் நோக்கில் இத் திட்டம் நாடு பூராகவும் நடை முறைப்படுத்தப்படுகின்றது.
இதில் தம்பலகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பண்டார மற்றும் இளைஞர் சேவை அதிகாரி ஜாபிர் உட்பட பொது மக்கள்,இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் என பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :