கல்முனை பிராந்திய வேலைத் திட்டங்களை துரிதப்படுத்த ஒப்பந்தக்காரர்களுடன் நடைபெற்ற சந்திப்பு !



மாளிகைக்காடு நிருபர்-
ல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் முன்னெடுக்கப்படுகின்ற PSSP செயற்றிட்டம் மற்றும் ஏனைய நடவடிக்கைகள் தொடர்பில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஒப்பந்தக்காரர்களை தமது அலுவலகத்தில் சந்தித்ததுடன் வேலைத் திட்டங்களை துரிதப்படுத்த கோரிக்கை விடுத்ததுடன் வேலை திட்டங்கள் யாவும் நேர்த்தியாகவும் மக்கள் பயன்படுத்தக்கூடிய விதத்திலும் அமையப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும் கட்டுமானங்களை பார்வையிடுவதற்காக பணிமனையினால் பல்வேறு குழுக்கள் அமைத்துள்ளதாகவும் குறித்த குழுவினர் கட்டிடங்களின் தரத்தினையும் ஏனைய உபகரணங்கள் மற்றும் பொருட்களின் தரத்தினையும் பரிசீலிப்பார்கள் என்றும் அவர்களிடம் தெரிவித்தார்

குறித்த கூட்டத்தில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் வைத்தியர் எம்.பி.ஏ. வாஜித் திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி எம்.சீ.எம் மாஹிர் பொறியியலாளர் திரு அச்சுதன் கணக்காளர் திருமதி உசைனா பாரிஸ் உயிரியல் மருத்துவப்பொறியியலாளர் தொழில்நுட்ப உத்தியோகத்தர் மற்றும் விடய உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :