பட உதவி:வி.மாதவன்-
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை புதிய ஆண்டின் கடமைச் செயற்பாடுகள் நிருவாக உத்தியோகத்தர் கே. விஜயகுமாரின் நெறிப்படுத்தலில், வைத்திய அத்தியட்சகர் டாக்டர் .ஜி.போல் ரொஷானினால் வைபவ ரீதியாக தேசிய கொடி ஏற்றி வைக்கப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன்போது ராணுவ வீரர்கள் உள்ளிட்ட நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த அனைவரையும் நினைவுகூர்ந்து இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அரச சேவைக்கான உறுதிமொழி சத்திய பிரமாணம் மேற்கொள்ளப்பட்டது
நூற்றாண்டுக்கான முன்னெடுப்பு என்பதை முன்னிறுத்தி 2023- 2048 அடுத்த இருபத்தைந்து வருடங்களுக்கான இலங்கையின் அபிவிருத்தி முன்னெடுப்பு என்ற தொனிப்பொருளின் கீழ் இடம்பெற்றதுடன், தற்போதைய சவால்களை வெற்றி கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அரச கொள்கைகள் மற்றும் வேலைத் திட்டங்கள் பற்றியும் அந்த குறிக்கோள்களை அடைவதற்கு அரச ஊழியர்களின் பங்களிப்பு பற்றியும் வைத்திய அத்தியட்சகரினால் உரை திகழ்த்தப்பட்டது.
இந் நிகழ்வில், வைத்தியசாலை நிபுணர்கள், வைத்தியர்கள், அனைத்து தர சுகாதார சேவை உத்தியோகத்தர்கள், சுகாதார ஊழியர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment