பொத்துவில் பிரதேசத்தில் நிலவும் கடும் வரட்சி காரணமாக பிரதேச மக்களின் ஜீவனோபாயம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் வேளாண்மை அறுவடை நிறைவடைந்த நிலையில் மேட்டுநில பயிர்ச்செய்கை, வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கை , சேனைப் பயிர்ச்செய்கை மற்றும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மிகவும் வறுமையான நிலையில் வாழும் பொத்துவில் , கோமாரி , தாண்டியடி , காஞ்சிரங்குடா ,செங்காமம், சங்கமான் கண்டி , உமிரி , ஊரணி, ஹிஜ்ரா நகர், செங்காமம் , லாஹுகல , பாணம மற்றும் இன்ஸ்பெக்டர் ஏற்றம் போன்ற பிரதேசங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான தமிழ்,முஸ்லிம், சிங்கள குடும்பங்களை சேர்ந்த மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வரட்சி காரணமாக புல் , பூண்டுகள், செடிகள் மற்றும் பயிர்கள் வாடி வதங்கி காடப்படுவதுடன் புற்தரைகள் வரண்டுள்ளதால் கால்நடைகள் உண்ண உணவின்றியும் குடி நீருக்காக அலைந்து திரியும் நிலையும் தோன்றியுள்ளது.
இப்பிரதேசத்திலுள்ள ஆறு , குளம் , குட்டைகள் , நீரோடை மற்றும் கிணறுகள் வெற்றிக் காணப்படுவதால்
இப்பிரதேச மக்கள் குடிநீருக்காக பல கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றே அதனை பெற்று வருகின்றனர்.
0 comments :
Post a Comment