வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் நடைபெறுகின்ற நூறு நாட்கள் செயல்முனைவின் ஓரங்கமாக நேற்று (19) திங்கட்கிழமை திருக்கோவில் வினாயகபுர கடற்கரையில் பட்டம் விட்டு 50 வது நூறுநாள் உரிமை போராட்டம் நடைபெற்றது.
இதன் கருப்பொருள் "கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்" என்பதாகும்.
அம்பாரை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேசத்தில் வினாயகபுர கடற்கரையில் பவனியாக வருகை தந்த மக்கள் இவ்வாறான கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தார்கள்
வடக்கு – கிழக்கு மக்களுக்கு கௌரவமான அரசியல் தீர்வை நோக்கிய பயணத்தில் 50 ஆவது தினத்தை முன்னிட்டு நேற்று திங்கட்கிழமை கௌரவமான அரசியல் தீர்வை வலியுறுத்தி பட்டம் ஏற்றப்பட்டது.
கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல் எனும் தொனிப் பொருளில் வடக்கு – கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் 100 நாட்கள் நடைபெற உள்ள செயற் திட்டத்தின் 50 ஆவது நாள் கவனயீர்ப்பு போராட்டம் வடக்கு- கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
சிறுவர்கள், பொது மக்கள், சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் பெண்கள் இணைந்து தமக்கு நிரந்தரமான அரசியல் உரிமை வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர்.
மேலும் பறக்கவிடப்பட்ட பட்டங்களில் எங்கள் நிலம் எமக்கு வேண்டும், நடமாடுவது எங்கள் உரிமை, பேச்சு சுதந்திரம் எங்கள் உரிமை, ஒன்று கூடுவது எங்கள் உரிமை உள்ளிட்ட வசனங்கள் எழுதப்பட்டு பறக்கவிடப்பட்டது.
கிராம மட்ட அமைப்பினர், விவசாய, மீனவ சங்கங்க பிரதிநிதிகள், பெண்கள் அமைப்பினர், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், மனித உரிமை ஆர்வலர்கள், வடக்கு- கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் பணியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்தப் போராட்டம் வடக்கு-கிழக்கு பகுதிகளில் தொடர்ச்சியாக சுழற்சி முறையில் 100 நாட்கள் வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment