அட்டனில் இரண்டாம் கட்ட தடுப்பூசி



க.கிஷாந்தன்-
நுவரெலியா மாவட்டத்தில் மிக வேகமாக பரவிவரும் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசிகள் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகள் ஒரு சில பொது சுகாதார வைத்திய அதிகார பிரிவுகளில் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் அட்டனில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான முதலாம் கட்ட கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களுக்கான இரண்டாம் கட்ட தடுப்பூசி 07.09.2021 அன்று வழங்கப்பட்டது.

ஜூலை 31ம் திகதி அட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு அட்டன் ஹைலன்ஸ் கல்லூரியிலும், ஆகஸ்ட் 02ம் திகதி அட்டன் D.K.W. மண்டபத்தில் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு டி.கே.டபிள்யூ மண்டபத்திலும் வழங்கப்பட்டது. மக்கள் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள மிகவும் ஆர்வமாக இருந்தனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :