கிண்ணியா பிரதேசத்தில் டிப்பர் வாகனம் மற்றும் மோட்டர் சைக்கிள் மோதி குடும்பஸ்தர் ஒருவர் பலி



எம்.ஏ.முகமட்-
திருகோணமலை ,கிண்ணியா _தம்பலகாமம் பிரதான வீதியில் டிப்பர் வாகனமொன்றுடன் மோட்டர் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டர் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் ஒருவர் ஸ்த்தலத்தில் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் (21 )நேற்றிரவு இரவு 6 மணியளவில் கிண்ணியா வில்வெளி பகுதியில் இடம் பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் கிண்ணியா நடுத்தீவைச் சேர்ந்த அலிமுகான் அன்வர் கார் (வயது 44 ) இரு பிள்ளைகளின் தந்தை எனவும் தெரிய வருகிறது.
கிண்ணியா கங்கைப் பகுதியிலிருந்து மணல் ஏற்றிக் கொண்டு வந்த டிப்பர் வாகனமும் மோட்டர் சைக்கிளில் கால் நடையை பார்க்கச் சென்று வீடு நோக்கி கிண்ணியாவுக்கு வரும் வழியில் டிப்பருடன் மோட்டர் சைக்கிள் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டதாக தெரிய வருகிறது.
உயிரிழந்தவரின் சடலம் கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டு வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனைக்ககாக திருகோணமலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :