வட்டகொடை கிராம சேவகர் பிரிவில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட் 19 கொரோனா தடுப்பு மருந்தேற்றும் நடவடிக்கைகள் இன்று வட்டகொடை தமிழ் வித்தியாலயத்தில் நடைப்பெற்றது. இதில் வட்டகொடை மேற்பிரிவு,வட்டகொடை கீழ்பிரிவு, யொக்ஸ்போட், வட்டகொடை நகர்,ஒலிரூட் கீழ்பிரிவு, சமன்புற கொலனி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு முதலாவது தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதன்போது கொட்டகலை பிரதேசசபை தலைவர் ராஜமணி பிரசாந்த், கொட்டகலை பிரதேசசபை உறுப்பினர் விஜயகுமார் (அப்பனார்) நேரடியாக சென்று அதனை பார்வையிட்டனர். இங்கு சுமார் 67 வீதமானோருக்கு முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக கொட்டகலை பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.
வட்டக்கொடையில் 67 வீதமானோருக்கு முதலாவது தடுப்பூசி
வட்டகொடை கிராம சேவகர் பிரிவில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட் 19 கொரோனா தடுப்பு மருந்தேற்றும் நடவடிக்கைகள் இன்று வட்டகொடை தமிழ் வித்தியாலயத்தில் நடைப்பெற்றது. இதில் வட்டகொடை மேற்பிரிவு,வட்டகொடை கீழ்பிரிவு, யொக்ஸ்போட், வட்டகொடை நகர்,ஒலிரூட் கீழ்பிரிவு, சமன்புற கொலனி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு முதலாவது தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதன்போது கொட்டகலை பிரதேசசபை தலைவர் ராஜமணி பிரசாந்த், கொட்டகலை பிரதேசசபை உறுப்பினர் விஜயகுமார் (அப்பனார்) நேரடியாக சென்று அதனை பார்வையிட்டனர். இங்கு சுமார் 67 வீதமானோருக்கு முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக கொட்டகலை பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment