இலங்கையின் 73வது தேசிய சுதந்திர தினத்தையொட்டி சம்மாந்துறை பிரதேச சபை ஏற்பாடு செய்த சுதந்திர தின நிகழ்வு முஹல்லா மஹல்லா அப்துல் மஜீட் ஞாபகார்த்த ஜனாஸா மண்டபத்திற்கு முன்பாக சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் தலைமையில் சிறப்பாக இன்று இடம்பெற்றது.
தேசியக்கொடி ஏற்றி, நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்கள் நினைவு கூறப்பட்டதுடன், நாட்டு மக்கள் அனைவரும் சமதானமும் சௌபாக்கியத்துடன் வாழ வேண்டி விசேட துஆப் பிராத்தனையினை சம்மாந்துறை ஜம்மியத்துல் உலமா சபை தலைவர் மௌலவி எம்.வை.ஏ.ஜலீல் நிகழ்த்தினார்.
இதன்போது மர நடுகை வேலைத்திட்டம் மற்றும் மையவாடி வளாகத்தில் சிரமதானமும் இடம்பெற்றது.
இதில் சம்மாந்துறை பிரதேச சபையின் உப தவிசாளர் ஏ.அச்சு முஹம்மட், சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்கள், மஜ்லிஸ் அஸ்ஸூறா தவிசாளர் எம்.எல்.அப்துல் மஜீட், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment