பொதுச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராக ஏ.எல்.எம்.சலீம் கடமையேற்பு...

ஏ.எச்.எம்.ரிகாஸ் -

லங்கை பொதுச்சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்ட சட்டம் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளரும், சாய்ந்தமருது முன்னாள் பிரதேச செயலாளரும் சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரியுமான ஏ.எல்.எம்.சலீம் அவர்கள் இன்று (புதன்கிழமை) பத்தரமுல்லையில் அமைந்துள்ள பொதுச்சேவை ஆணைக்குழுவின் தலைமைக் காரியாலயத்தில் தமது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

இந்நியமனத்தை வழங்கி சாய்ந்தமருது மண்ணை கௌரவப்படுத்திய மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அவர்களுக்கும், சிபாரிசினை மேற்கொண்ட பாராளுமன்ற தெரிவுக் குழுவிற்கும் ஏ.எல்.எம்.சலீம் ஊடகப் பிரிவு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.

அத்துடன், தேசிய காங்கிரஸ் தேசிய தலைவர் ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் மற்றும் ஏனையோருக்கும் எமது ஊடகப் பிரிவு நன்றிகளை கூறிக் கொள்கின்றது.

மேலும், இந்நியமனத்தினூடாக நமது சமூகத்திற்கு பல்வேறு நற்பணிகளைச் செய்ய சித்தமாகவுள்ள சலீம் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :