புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை சந்திப்பு


புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை சந்திப்பு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெறவிருப்பதாக மின் சக்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

அமைச்சரவையில் புதிதாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட சமகால அரசாங்கத்தின் 28 அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர்.புதிய பாராளுமன்றத்தின் சபாநாயகராக மஹிந்த யாப்பா அபேவர்த்தனவையும் சபை முதல்வராக தினேஷ் குணவர்த்தனவையும் ஆளும் கட்சி பிரதம கொறடாவாக ஜோன்ஸ்டன் பெர்னான்டோவையும் நியமிப்பதற்கான பரிந்துரை இங்கு இடம்பெறவுள்ளது.

இதேவேளை ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் சந்திப்பொன்றும் ஜனாதிபதி தலைமையில் இன்று மாலை இடம்பெறவுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :