தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு ஏற்படும் வருமான இழப்புகளை தாங்கிக்கொள்ள மாற்றுப் பொறிமுறையூடாக நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பது குறித்து கலந்துரையாடல்களை நடத்த முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
“சுகாதார அமைச்சு வழங்கியுள்ள சுகாதார ஆலோசனைகளுக்கு அமையவே பயணிகள் போக்குவரத்துச் சேவைகள் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அரை சொகுசு மற்றும் சாதாரண பஸ்களின் கட்டணத்தை 1.5சதவீத்தால் அதிகரிக்குமாறு தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
எக்காரணத்தை கொண்டும் இந்த நெருக்கடியான சந்தர்ப்பத்தில் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படாது. என்றாலும் இந்தத் தொழிலை முன்னெடுத்துச் செல்வது கடினமாகவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் கூறுகின்றனர். அதற்கு மாற்று நடவடிக்கைகளை நாம் மேற்கொள்வோம். கொரோனா வைரஸ் தொற்று பரவும் காரணிகளில் மிகவும் சாதகமானதாக பயணிகள் போக்குவரத்துச் சேவை காணப்படுவதாக சுகாதார துறையினர் அடையாளப்படுத்தியுள்ளனர். அதன் காரணமாக சுகாதார துறையினரின் ஆலோசனைகளுக்கு அமையவே அரசாங்கம் செயற்படும்.
இதேவேளை, கடந்தவாரம் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் எக்காரணத்தை கொண்டும் பஸ் கட்டணங்களை அதிகரிக்க அரசாங்க நடவடிக்கையெடுக்காது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சுட்டிக்காட்டியுள்ளார்” எனவும் அவர் கூறியுள்ளார்.